பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310


ஊழி வெங் காற்றின்
        வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார்.
வாழிய அனுமன் தோளை
        ஏத்தினார், மலர்கள் தூவி

அமரர் அனுப்பிய அந்தப் பெரிய தேரில் ஏறினான் இராகவன் இராகவனுடைய தேர் புழுதியைக் கிளப்பிக் கொண்டு, எழுந்தது. இராமபிரானுக்கு உறுதுணையாய் நின்ற அநுமனின் தோள்களுக்கு மலர் தூவி வாழ்த்தினர். தேவர்கள்,

***

வீரன் - வீரனாகிய இராமபிரான்; ஆழி அம் தடம் தேர் ஏறலும் - சக்கரமமைந்த அழகிய அகன்ற (அந்தத்) தேரின் மீது ஏறலும்; அலங்கல் சில்லி - பிரகாசிக்கும் தேருருளை; பூழியில் - (மண்) புழுதியில்; சுரித்த - புதைந்த; தன்மை -தன்மையை; நோக்கிய - பார்க்க; புலவர் எல்லாம் - தேவர்கள் யாவரும் (இராமபிரானின் உடற்பாரத்தை உன்னி); ஊழிவெம் காற்றின் - யுகாந்தத்தில் வீசும் வெப்பம் நிறைந்த காற்றைக் காட்டிலும்; வெய்ய கலுழனை - கொடிய கருடாழ்வானின் ( ஆற்றலை); ஒன்றும் சொல்லார் - (புகழ்ச்சியாக) ஒன்றையும கூறாமல்; அநுமன் தோளை- அநுமனின் (ஆற்றல் மிக்க) தோள்களின் மீது; மலர்கள் தூவி - மலர்களைச் சொரிந்து; ஏத்தினார் - அவற்றைப் பாராட்டினார்கள்.

***

இராமனின் வலக்கைப் போன்றவன் மாருதி. இராமனாகிய பரந்தாமனையே சுமந்த பெருமை அநுமன் ஒருவனுக்கே உண்டு; அவ்வளவு வலிமை பொருந்திய மாருதிக்கு இங்கு ஏற்றம் தரப்படுகிறது.