பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318


பற்றி வானிற் சுழற்றிப்
        படியின் மேல்
எற்று வேனென்று உரைக்கும்
        இரைக்கும்.

ஆத்திரம் மேலிட்ட இராவணன் கூச்சலிட்டான். என்ன என்று கர்ச்சித்தான்? “வெற்றியே தரும் என் வில்லைக் கொண்டு இவனைக் கொல்ல எண்ணமாட்டேன். கேவலம், அற்ப மனிதனான இந்த இராமனைத் தேவர் தந்த தேருடனே பற்றி வானிற் சுழற்றி, பூமியின் மேல் மோதுவேன்!” என கத்தினான்.

***

கோள் இலா - வலிமை இல்லாத; சிற்றையாளனை -சிறுவனை; விற்கொடு - (நம் கை) வில்லைக் கொண்டு; கொல்லுதல் -கொல்லுதலானது;குற்றம் - (நம் பெருமைக்குச்) குறைவாவதாகும்; (ஆதலால்) தேவர் தம் தேரோடும் - தேவர்களுக்குரிய தேரோடும்; பற்றி-இவனைப் பிடித்து; வானில் சுழற்றி - வானத்தில் சுழலச் செய்து; படியின் மேல் - பூமி மீது; எற்றுவேன் - மோதுவேன்; என்று உரைக்கும் இசைக்கும் - என்று சொல்லிக் கூச்சலிடுவான்.

***

பயமும் சினமும் இராவணனை உந்தித்தள்ள அம்புமழை பெய்கிறான். அவை கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் தன்மையன என்றாலும், அவைகள் நடு வழியிலேயே அற்றுப் போய்விடுகின்றன. வலிமையிழந்தன. இருள் கவியவும் செய்தன.

***