332
காலும் வெங் கனலும் கடை
காண்கிலா,
மாலும் கொண்ட வடிக் கணை,
மா முகம்
நாலும் கொண்டு நடந்தது,
நான் முகன்
மூல மந்திரம் தன்னொடு
மூட்டலால்.
பின்னர், அயன் படையை விடுத்தான். இது கொடுங்கனலும் வேகமுடைய கூரிய கணை. இந்த அத்திரத்தை நான்முகனுக்கு உரிய முக்கிய மந்திரத்தை உச்சரித்து விட்டதால், பெரிய நான்கு முகங்களையும் கொண்டு சென்றது.
***
மாலும் - திருமாலின் அவதாரமான இராமபிரான்: கொண்டி - கைக் கொண்டதாகி; காலும் - காற்றும்; வெம் கனலும் - கொடிய தீயும்; கடை காண்கிலா - முடிவு காணமுடியாத; (விரைவும் கொடுமையும் கொண்ட): வடிகணை - கூரிய அந்த அத்திரமானது; நான்முகன் மூலம் மந்திரம் தன்னொடு மூட்டலால் - பிரமதேவனுக்குரிய பீஜாச்சரத்தைக் கொண்ட மத்திரத்துடன் செபித்து விட்டளவில்; மா முகம் நாலும் கொண்டு நடந்தது - பெரிய முகங்கள் நான்கினையும் கொண்டு சென்றது.
***
முக்கோடி வாழ் நாளும் முயன்று உடைய
பெருந்தவமும் முதல்வன் முன்னாள்
எக்கோடி யாராலும், வெலப்படாய்
எனக் கொடுத்த வரமும் ஏனைத்