பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

333

திக்கோடும் உலகனைத்தும் செருக்கடந்த
        புயவலியும் தின்று மார்பில்
புக்கோடி உயிர் பருகிப் புறம் போயிற்று
        இராகவன் தன் புனித வாளி

தூயவனான இராமனின் அந்த அம்பு, இராவணனது முக்கோடி ஆயுளையும், முன் செய்த பெருந்தவத்தையும் பிரமன் கொடுத்த வரத்தையும், அவன் போர் வலி, புயவலி இரண்டையும் ஒழித்து அவன் மார்பிலே புகுந்து உடலெங்கும் குடைந்து உயிரைப் பருகிவிட்டு, புறத்தே போயிற்று.

இராகவன் தன் புனித வாளி - இராமன் விடுத்த தூய அத்திரமானது; (இராவணனுடைய) முக்கோடி வாழ் நாளும் - மூன்று கோடி ஆயுளையும்; முயன்று உடைய பெரு தவமும் - முயன்று செய்த பெரிய தவத்தையும்; முதல்வன் - முதற்கடவுளான பிரமதேவன்; முன் நாள் - முன் காலத்தில், எக்கோடி எவராலும் - முப்பத்து முக்கோடி தேவர்களில் எந்த வரிசையிற் சேர்ந்தவராலும்; வெலப்படாய் - நீ வெல்லப்படமாட்டாய்; என கொடுத்த வரமும் - என்று தந்த வரமும்; ஏனை - மற்றும்; திக்கு ஒடும் - திசைகளோடும்; அனைத்து உலகும் - எல்லா உலகத்திலும்; செரு கடந்த - போரினால் வென்ற புயம் வலியும் - புய வலிமையும்; தின்று - அழித்துவிட்டு; மார்பில் புக்கு - (அவனுடைய) மார்பில் நுழைந்து, ஒடி - உடலெங்கும் இசுற்றி, உயிர் பருகி - உயிரைக் குடித்துவிட்டு; புறம் போயிற்று - வெளிச் சென்றது.

***