பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

335


இராவணன் வீழ்ந்தாலும் அவன் முகம் பொலிவுற்றது. ஏன்? போர் சினம், சூழ்ச்சிகள், காமம், தோள் வலி ஆகியன அடங்கின. மனத்திலே நீண்ட காலத்திற்குப் பின் பிறந்தது அமைதி. அந்த அமைதி, முகத்தை மும்மடங்கு பொலிவுறச் செய்தது.

***

பூதலத்தின் ஆக்குவாய் நீ விடுமிப்
        பொலந்தேரை என்ற போதின்
மாதலிப் பேர் அவன் கடவ மண்டலத்தின்
        அப்பொழுதே வருதலோடும்
மீதலைத்த பெருந்தாரை விசும்பளப்பக்
        கிடந்தான் தன் மேனி முற்றுங்
காதலித்த உருவாகி அறம் வளர்க்கும்
        கண்ணாளன் தெரியக் கண்டான்

தேரினின்று கீழே இறங்கினான் கோசலையின் மகன், உதிர வெள்ளத்தில் கிடந்தான் இராவணன்.

தேரை இந்திரனிடம் கொண்டுபோகுமாறு மாதலியை அனுப்பிய இராமன். இராவணனைச் சென்று கண்டான். புறங்கொடா வீரன் இராவணனின் பராகிரமத்தை பாராட்டினான். அரக்கனின் மார்பில் பாய்ந்த திக்கயத்தின் தந்தம் முதுகில் அணிபோல் விளங்கக் கண்டான். மனம் உளைத்தான். விபீடணனை இராவணனின் வீழ்ச்சி மிகவும் பாதித்தது. சோகத்தால் துடித்தான்; துவண்டான்; அரற்றினான். இராமன் அவனுக்கு ஆறுதல் கூறினான். ‘உலகுள்ள அளவும் இராவணன் வாழ்வான்’ என்று கூறி, பகைமையைவிட்டு இராவணனுக்கு இறுதி கடன்களைச் செய்யப் பணித்தான்.

***