பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342


மேலும் தொடர்ந்தான் இராமன். “நீ எங்கே பிறந்தாய்? உயர் குடியிலா? இல்லையே! சனகராசன் யாக பூமியை உழுதபோது உழுபடைசாலில் தோன்றியவள் தானே! எனவே சிறந்த அணிகளில் உரிய உம் மிச்சங்களில் பதிக்கப்பெறும் மதிப்பிற்குரிய நவமணிகள் ஒளி செய்வதுபோல், புகழுடன் ஒளிரும் நற்பண்புகள் உன்னிடம் இல்லாமல் ஒழிந்தன! அத்துடனா? நீ ஒருத்தி பிறந்ததால், அரசனுடைய புகழும் அழிந்தது!” என்றான் கடுமையாக.

***

கலத்தினில் - ஆபரணங்களில்; பிறந்த - அமைக்கப்படுகிற; மாமணியில் - சிறந்த இரத்தினங்கள் போன்று; காந்துறு - விளங்குகிற; நலத்தினில் - நன்மையுடன்; பிறந்தன - பொருந்தியனவான, குணப் பண்புகள்; நடந்த - (உன்னை விட்டு) விலகின; (ஆகவே) நன்மை சால் - மேன்மை மிக்க; குலத்தினில் பிறந்திலை - உயர்ந்த குலத்திற் பிறவாமல்; கோள இல் - வலிமை இல்லாத; கீடம் போல் - புழுப் போன்று; நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் - நிலத்தினின்று நீ தோன்றியதற்குப் பொருந்திய தன்மையை நன்றாக விளக்கிக் காட்டிவிட்டாய்.

***


கண்ணினை யுதிரமும் புனலும்
      கான்றுக
மண்ணினை நோக்கி மலரின்
      வைகுவாள்.
புண்ணினைக் கோலுறுத் தனைய
      பொம்மலாள்
உண்ணினைப் போவி நின்று
      உயிர்ப்பு வீங்கினாள்.