பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344


பார்க்கெலாம் பத்தினி
        பதுமத் தானுக்கும்
பேர்க்கலாஞ் சிந்தையன்
        அல்லள் பேதையேன்
ஆர்க்கலாங் கண்ணவன்
        அன்று என்றால் அது
தீர்க்கலாம் தகையது தெய்வந்
        தேறுமோ.

இராமனே தன் கற்பு நிலையைச் சந்தேகிக்கிறான். தானே நிரூபித்துக் காட்ட இயலாத நிலையில் பரந்தாமன் உடைய இந்த ஐயத்துடன் கூடிய உள்ளப் பாங்கினை எந்தத் தெய்வந்தான் மாற்றமுடியும் என்று சீதை இரங்குகிறாள். இதைவிட, இறந்து போயிருந்தால் இத்தகைய பழிச்சொற்களை கேட்காமலாகவாவது இருந்திருக்கலாமே என நினைக்கிறாள் பேதை.

***

பேதையேன் - பேதைப் பெண்ணாகிய யான்; பார்க்கு எலாம் - நில உலகம் அடங்கலும்; பத்தினி - (உத்தமமான) கற்பரசி; பதுமத்தானுக்கும் - (ஆக்கும் கடவுளான) பிரமதேவனுக்கும்; பேர்க்கலாம் சிந்தையன் அல்லள் - பேதிக்கக் கூடிய மனநிலை யுடையேன் அல்லேன்; (இங்ஙனம் எனினும்); பார்க்கெலாம் ஆர்க்கலாம் கண்ணவன் - புலத்தோரெல்லாம்; மகிழ்ந்து ஆரவாரிக்கும்படியான; அருட்கண்ணோக்குடையவன் ஆன இராமபிரான் - (தனது கற்பு); அன்று என்றால் - அத்தன்மைய தன்று என்று பகர்வதால்; அது - அந்த எண்ணத்தைத் தீர்க்கலாம்; தகையது - போக்கும் படியான வகையை; தெய்வம் தேறுமோ - பிறிதொரு தெய்வம் அறிந்து கொள்ளக் கூடுமோ?

***