பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

345



திருமாலேதான் இராமன் என்றாலும் மங்கையர் மனநிலையை உணர்வரோ?

எனவே இனி இந்த அவப்பெயரை நீக்குவது எப்படி?

***

ஆதலிற் புறந்தினி யாருக்காக
        என்
கோது அறு தவத்தினைக் கூறிக்
        காட்டுகேன்
சாதலிற் சிறந்த தொன்று இல்லை
        தக்கதே
வேதநின் பணியது விதியும்
        என்றனள்

பிராட்டி இராமனிடம் “என் கற்பு நிலையை நிரூபித்துக் காட்டுகிறேன்?” எனக் கூறி தீக் குளிக்கப் போவதாகச் சொல்கிறாள். தீ ஒருவேளை அவளை உயிரைக் கொண்டு விட்டால், “அதுவும் நல்லதே!” என்கிறாள் விரக்தியோடு.

***

வேத - வேத வடிவினனே! ஆதலால்-இவ்வாறு ஆதலின் - இனி - இனிமேல்; என் - என்னுடைய; கோது அறு தவத்தினை - குற்றம் தீர்ந்த கற்பு நெறியை; புறத்து - வெளியே; யாருக்கு ஆக கூறி காட்டுகேன் - (வேறு) யாருக்குத்தான் சொல்லி அறிவிக்கக் கடவேன்; சாதலில் சிறந்தது ஒன்று இல்லை - இறந்துபடுதலைக் காட்டிலும் மேலானது யாதும் இன்று; நின் பணி - (சாதி) என்று நீ கட்டளை விட்டருளியது; தக்கதே - தகுதியானதே; விதியும் அது - என் தலைவிதியும் அவ்வாறு உள்ளது போலும்; என்றனள் - என்று மொழிந்தாள் பிராட்டி.

***