பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26



நடத்தும் சண்டையில்; இடை - நடுவே; அம்பு தொடுக்குமோ - அம்பு தொடுப்பானோ? (மாட்டான்)

***


“சிறிதும் கலங்காதே! இங்கேயே இரு. கண் இமைப் பொழுதிலே அந்த சுக்கிரீவனுடைய உயிர் குடித்து. அவனுக்குத் துணை நிற்பவரையும் அழித்து இங்கு நான் திரும்பி வருவேன்” என்று தாரைக்கு ஆறுதல் மொழி பலவும் கூறிப் போருக்குப் புறப்பட்டான் வாலி.

போர் முழக்கம் செய்த பின்னோனாகிய சுக்கிரீவனை நோக்கித் தானும் எதிர் முழக்கம் செய்தான்.

அப்போது இராமபிரான் தனது இளவலாகிய லட்சுமணனை நோக்கிக் கூறுகிறான் : “அப்பனே! நன்றாக ஊன்றி நோக்குவாயாக. தேவர்களாயினும் சரி; அசுரர்களாயினும் சரி; கடல், காற்று, மேகம் ஆகிய எவையாயினும் சரி. இந்த வாலி சுக்கிரீவர்களுக்கு ஒப்பாகுமோ!”

இளவலும் இயம்பலுற்றான்: “ஐயா! இந்த சுக்கிரீவன் தன் முன்னவனாகிய வாலியைக் கொல்லும் யமனை இங்கே அழைத்து வந்துளான். குரங்குகளின் நிந்தனைக்கு ஆளாகி இப்போரில் ஈடுபட்டோமே என்று என் மனம் குழம்பியுள்ளது. எதையும் சிந்திக்கும் திறன் இல்லாதவனாக இருக்கிறேன். தன் முன்னவனையே கொல்ல முற்பட்டுள்ள இந்தச் சுக்கிரீவன் நம் பால் நேர்மையாக நடந்து கொள்வான் என்பது என்ன உறுதி?”

“தம்பி! எந்தத் தாய் வயிற்றில் பிறந்தவரும் பரதனைப் போல் ஆவாரோ ஆதலின் குரங்குகள் பால் அத்தகைய நல் ஒழுக்கம் காணலாமோ?” என்று கூறி லட்சுமணனின் குழப்ப நிலையை நீக்கினான் இராமன்.

வாலியும் சுக்கிரீவனும் குன்றொடு குன்று மோதுவது போலவும், வெற்றியும், வலிமையும் வாய்ந்த ஆண்