பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

350

நின்ற நீர்மையு நினைவு நீ
        தேர்ந்தெம்மின் நேர்தல்
நின்றெ னாவான் மோதிரங்
        கையொடு நடந்தான்.

அப் பணி யாது? “நான் ஊர் வந்து சேரும் முன்பே, நீ இப்போதே நந்தி கிராமத்திற்கு விரைந்துச் செல். பரதனைச் சந்தித்து நான் நலமாகயிருப்பதை தெரிவி. அவன் செய்ய நினைத்திருக்கும் செயலைத் தடுத்து நிறுத்து. இந்த மோதிரத்தை அவனிடம் கொடு!” என்று மோதிரத்தை அநுமனிடம் கொடுத்தான். வாயு மைந்தன் பறந்தான்

***

மாருதி - அநுமான்! நீ - நீ; நாம் பதி வருதும் முன் - நாம் அயோத்தி நகர்க்கு வருவதன் முன்னரே; இன்று - இப்பொழுதே; ஈண்ட சென்று - விரைந்து போய்; (நந்திக் கிராமத்தின் கண் உள்ள பரதனுக்கு); தீ தின்மை செப்பி - எனது நலத்தைப் பகர்ந்து; அ தீ அவித்து - (அவன் புகுவதற்காக மூட்டப்பட்ட) தீயை அணைத்து; இளையோன் - (எனது தம்பியாகிய) அப் பரதன்; நின்ற நீர்மையும் - மேற்கொண்டு நின்ற தன்மையும்; நினைவும் - அவன் மனத்து எண்ணத்தையும்; தேர்ந்து - ஆராய்ந்தறிந்து; எம்மின் நேர்தல் - எம்பால் வந்து அடைதல்; நன்று - நல்லது; எனா - என்று கூறி; (தன் கை மோதிரத்தைத் தர) அவன் - அந்த மாருதி; மோதிரம் கை கொடு நடந்தான் - மோதிரத்தைக் கையில் ஏற்றுக்கொண்டு சென்றான்.

***

பரதன் ஏன் தீ வளர்த்தான்? எதற்கு தீயில் விழத் துணியவேண்டும்? இது, ஏன், ஏன்?

***