பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

352


இனி - இப்பொழுது; மின்னு தீ இடை - ஒளி விட்டெரிகின்ற தீயினில்; யான் வீடுவென் - விழுந்து உயிர் துறப்பேன்; என் சொல்லை மாறாது - (நீ) என் சொல்லை மறுக்காமல்; மன்னன் ஆதி - (அயோத்திக்கு) அரசன் ஆவாய்; என்றான் - என்று மொழிந்தான்.

***

பரதனுக்குச் சத்துருக்கனன் எவ்வளவோ சமாதானம் கூறினான். பரதன் அதனை ஏற்க மறுத்தான். தீ மூட்டக் கட்டளையிட்டான்.

கோசலை விவரம் அறிந்தாள். ஓடோடி வந்தாள். பரதனுக்கு நீதி பல உரைத்தாள். பரதனை தடுத்து நிறுத்த பார்த்தாள். பரதன் கோசலையின் சொல்லை ஏற்க மறுத்தான். இராமன் வராதது அவனை நிஷ்டூரமாகப் பேச வைத்தது. தீயிக்குப் பூசை செய்தான் பரதன். திடீரென்று எதிரே பெரு வடிவுகொண்டு மாருதி நின்றான்,

***

ஐயன் வந்தனன்;
        ஆரியன் வந்தனன்
மெய்யின் மெய்யன்ன
        நின்னுயிர் வீடினால்
உய்யுமோ அவன்
        என்று உரைத்து உட்புகா
கையினால் எரியைக்
        கரியாக்கினான்.