பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32



கண்ணுற்றான் வாலி, நீலக்
        கார்முகில் கமலம் பூத்து
மண் உற்று வரிவில் ஏந்தி
       வருவதே போலும் மாலை
புண் உற்றது அனைய சோரி
       பொறியோடும் பொடிப்ப நோக்கி
“எண்ணுற்றாய்? என் செய்தாய்” என்று
       ஏசுவான் இயம்பலுற்றான்.

அப்போது இராமன் அவன் எதிரே வந்தான். கார் மேகமானது தாமரை மலரப் பெற்று வானத்தினின்றும் மண் மேல் வந்து வில் ஏந்தி வருவதே போல வத்தான்.

“என்ன நினைத்தாய்? என்ன செய்தாய்?” என்று சீறினான் வாலி, கண்களில் ரத்தம் தெறிக்க, தீப்பொறி பறக்க மேலும் இராமனை ஏசுகிறான் வாலி.

***


நீலம் – நீல நிறம் கொண்ட கார்முகில் – கார் காலத்து மேகம்; கமலம் பூத்து – தாமரை மலரப் பெற்று; வரிவில் ஏந்தி – கட்டமைத்த வில்லினை ஏந்தி; மண் உற்று – பூமியில் இறங்கி; வருவதே போலும் – நடந்து வருவது போல; கண்ணுற்றான் – (வருகின்ற) இராமனைக் கண்ட; வாலி – வாலியானவன்; புண் உற்றாது அனைய – புண்ணிலிருந்து வெளிப்படுவது போல; சோரி – இரத்தம்; பொறியொடும் – பொடிப்ப – தீப்பொறியோடு; வெளிப்பட நோக்கி – இராமனைப் பார்த்து; எண்ணுற்றாய் – என்ன நினைத்தாய்? என் செய்தாய்? – என்ன செய்தாய்? என்று – என்று வினவி; ஏசுவான் – பழிப்பவனாய்; இயம்பலுற்றான் – சொல்லத் தொடங்கினான்.

***