பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38


வீரம் அன்று; விதி அன்று
        மெய்ம்மையின்
வாரம் அன்று; நின் மண்ணினுக்கு
        என் உடல்
பாரம் அன்று; பகை அன்று;
        பண்பு ஒழிந்து
ஈரம் அன்று இது
        என் செய்தவாறு நீ?

வீரம் அன்று; அறநூல் விதியும் அன்று; மெய்யின் பாற்பட்டதும் அன்று; உனக்கே உரிய மண் உலகிற்கு என் ஒருவனது உடல் ஒரு பெரும் சுமையன்று; நான் உன் பகையும் அன்று இரக்கமின்றி என்ன செய்தாய்?

***

(நீ செய்த இச் செயல்) வீரம் அன்று–வீரன் செயற்குரிய செயல் அன்று; விதி அன்று-தரும சாத்திர விதி அன்று; மெய்ம்மையின் வாரம் அன்று – உண்மையின்பால் பட்டதும் அன்று; நின் மண்ணினுக்கு – உனக்கு உரியதான இந்த நில உலகுக்கு; என் உடல் – என் ஒருவனது உடல்; பாரம் அன்று – பொறுக்க முடியாத சுமை அன்று; பகை அன்று - உனக்கு நான் பகைவனும் அல்லன்; (இங்ஙனமிருக்க) பண்பு ஒழிந்து - நீ உன் பெருங்குணத்தைவிட்டு; ஈரம் அன்று - இரக்கம் இல்லாத இது செய்த ஆறு - இச் செயல் செய்தது; என் - எக் காரணம் பற்றி?

***


நூல் இயற்கையும் நும்
        குலத்து உந்தையர்
போல் இயற்கையும்
        சீலமும் போற்றலை