39
வாலியைப் படுத்தாய் அலை
மன் அற
வேலியைப் படுத்தாய்
விறல் வீரனே.
வலிமை மிக்க வீரனே! தரும சாந்திரங்களிலே கூறப்பட்டுள்ள முறையையும், உங்கள் குலத்திலே தோன்றிய தாதை மூதாதை போன்றாரின் இயல்பையும், நல்ஒழுக்கத்தையும், நீ பாதுகாக்கவில்லை; வாலியாகிய என்னை நீ கொன்றாய் அல்லை; அரச நீதி எனும் வேலியையே அழித்தாய்.
***
விறல் வீரனே - வலிமை மிக்க வீர; நூல் இயற்கையும் - தரும சாஸ்திரங்களிலே கூறப்பட்டுள்ள முறையையும்; நும் குலத்து - உங்கள் குலத்திலே தோன்றிய; உந்தையர் போல் இயற்கையும் - தாதை மூதாதை போன்றோரின் இயல்பையும்; சீலமும் - நல்ஒழுக்கத்தையும்; போற்றலை - நீ பாதுகாத்தாய் இல்லை; வாலியைப்படுத்தாய் அல்லை - வாலியாகிய என்னை நீ அழித்தாய் இல்லை; மன் அற வேலியை படுத்தாய் - அரச நீதி எனும் வேலியையே அழித்துவிட்டாய்.
***
இவ்வாறு இராமனை ஏசினான் வாலி. இராமன் கோபங்கொள்ளவில்லை. மிக்க அமைதியாக தான் வாலியை 'கொன்றது சரியே' என்று நிரூபித்துக் காட்டினான். அதை வாலியும் ஏற்றுக்கொண்டான்.
இராமன் கூறிய காரணங்கள் யாவை? வாலி இந்திரனின் அம்சம். தேவருள் இந்திரன் தாமச குணம் நிறைந்தவன். தன் ஆணவத்தால் பலமுறை தன் பதவியை இழந்திருந்தான். ஆனாலும் இறுதியில் கடவுள் அவனைக் காப்பாற்றினார். ஏன்? தன் இரக்க குணம் காரணமாக,