41
“தாய் என உயிர்க்கு நல்கி
தருமமும் தகவும் சால்பும்
நீ என நின்ற நம்பி
நெறியினின் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம் பால்
நவை அற உணரலாமோ
தீயன பொறுத்தி” என்றான்
சிறியன சிந்தியாதான்.
தாய் போல உயிர்களுக்கு நலம் செய்து, தருமமும், நடுநிலையும், நற்குண நிறைவும் நீயே என்று சொல்லும்படி அவ்வழி நின்று காட்டும் புருஷோத்தமனே! அறநெறி நோக்கில் காணும் தன்மையை “நாய் போன்ற எம்மிடம் குற்றம் காணலாமோ? தீய செயல்களைப் பொறுத்தருள்வாய்” என்றான் சிறிய எண்ணம் இல்லாத வாலி.
***
தாய் என - தாய் போல; உயிர்க்கு - உயிர்களுக்கு; நல்கி - நலம் செய்து; தருமமும், தகவும், சால்பும் - தருமமும் நடுநிலையும் நற்குண நிறைவும்; நீ என - நீயே என்று சொல்லும்படி; நிறை நம்பி - அவ்வழி நின்று காட்டும் புருஷோத்தமனே; நெறியனின் நோக்கும் நேர்மை - அறநெறி நோக்கில் காணும் தன்மையை; நாய் என நின்ற - நாய் போலிருக்கும்; எம் பால் - எங்கள் பால்; நவை அற உணரலாமோ - குற்றம் காணல் இயலுமோ; தீயன பொறுத்தி - தீய செயல்களைப் பொறுத்தருள்வாய்; என்றான் - என்றான்; சிறியன சிந்தியாதான் - சிறிய எண்ணங் கொள்ளாத வாலி.
***