பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

இறையுடைக் குலிச வேலெறிதலால்
        முனுஞ்
சிறை அறுமலையெனச் செல்லுஞ்
        செய்கையான்.

அப்போது சம்பாதி வருகிறான். சம்பாதி சடாயுவின் அண்ணன்; கழகு அரசன். அவனை வர்ணிக்கிறார் கம்ப நாடார் முன்னாளில் மலைகள் சிறகு கொண்டிருந்தவனாம். மக்களை அவை பெரிதும் துன்புறுத்தியதால் அவைகளின் இறக்கைகளை அரிந்தானாம் இந்திரன். அந்த சிறகு தீயப் பெற்றமலை போல் வேகமாகச் செல்லக்கூடியவனாம் சம்பாதி.

தன் தம்பி இறந்ததைக் கேட்டான். ஆறா துயருற்றான். துயரம் தங்காது அவன் நெஞ்சு பறை போல படபடத்தது. உடம்பு துடித்தது; புலம்பினான்; பதறினான்; அழுதான்; அரற்றினான்.

***

முறை உடை எம்பியார் முடிந்த - ஆ நீதி நெறியுடைய எனது தம்பி இறந்தது எப்படி? எனா - என்று: பறையிடு நெஞ்சினன் - பறையடிப்பது போல படபடக்கின்ற நெஞ்சை உடையவனும்; இறை உடை குலிசம் வேல் எறிதலால் முனம் சிறை அறும்மலை என செல்லும் செய்கையான் – தேவேந்திரன் தான் கொண்டுள்ள வச்சிராயுதத்தை வீசி எறிந்ததால் முற்காலத்தில் சிறகுகள் அறுபட்டு போன மலை போல செல்லுந் தொழிலுடையவன்.

***

பாகொன்று குதலையாளைப் பாதக
        அரக்கன் பற்றிப்
போகின்ற பொழுது கண்டேன் புக்கன்
        இலங்கை புக்கு