பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கிட்கிந்தா காண்டம்

நூன்முகம்

கிட்கிந்தா காண்டம் ஆரணிய காண்டத்தைத் தொடர்ந்துவரும் ஓர் காண்டம். ஆரணிய காண்டத்தின் இறுதியில் கவந்தனும் சபரியும் கூறியபடி இராம இலக்குவன் பம்பை நதியை அடைந்து ருசிய சிருங்க மலைச் சாரலை அடைகின்றனர். இவ்விருவரையும் அநுமன் வந்து காண்கிறான். சுக்கிரீவன் இராமபிரானுக்கு சீதையை தேட உதவுவதாக வாக்களிக்கிறான். வானரர் பிராட்டியை தேடி அலைகின்றனர். இந்நிகழ்ச்சிகளைக் கூறுவதே இக்காண்டம்.

இது கம்பராமாயணத்தின் நான்காவது பெரும்பகுதியாக அமைந்துள்ளது. இக் காண்டம் 1004 செய்யுட்கள் கொண்டது. எனினும் கதைக் கோர்வைக்காக 50 செய்யுட்களே தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.

இக்காண்டத்தின் நிகழ்ச்சிகள் யாவும் தண்டகாரணியம் அதனை அடுத்த தென்னிந்திய பகுதிகளிலும் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

இராமாயணத்தில் சிதாபிராட்டியுடன் இல்லாத இராமபிரானை இக்காண்டத்தில் மட்டுமே காண்கிறோம்.

மேலே படிப்போமா?

தொகுப்பாசிரியர்