பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83



தேனவாம் விரைச் செங்கழு
        நீர்த் துயில் செய்ய
வானயாறு தம் அரமியத்
        தலம் தொரும் மடுப்ப.

கற்பக தருக்களிலே தேனையுண்ட வண்டுகள் திகட்டிப்போய் அத் தேனை வெறுத்து அம்மாட மாளிகைதோறும் வந்து பாயும் வான கங்கையிலே மலர்ந்துள்ள செங்கழு நீர்ப் பூவிலே தேனை மாந்தித் துயில்கின்றனவாம்.

***

நான கற்பக நாள் மலர் நறு விரை நான்ற பானம் - வானிலுள்ள கஸ்தூரி மணம் மிகுந்த கற்பக மரங்களின் அன்று அலர்ந்த மலர்கள் நன் மணத்தொடு சொரிந்த தேன்; வாய் உற - தம் வாயில் வந்து புக; வெறுத்த - (ஏராளமாகக் குடித்துப் பின் வேண்டாம் என்று) வெறுத்த; ஆறுதாள் உடை பறவை - ஆறு கால் கொண்ட வண்டு; வானயாறு - ஆகாய கங்கையிலே; விரை செங்கழுநீர் - மணம் வீசும் செங்கழுநீர் மலரிலே உள்ள; தேன் அவாம் - தேனை விரும்பி; துயில் செய்ய - குடித்து அம் மயக்கத்தினால் துயில; தம் அராமிய தலம் தொறும் மடுப்ப - அவ்வான ஆறு மாடங்களின் நிலா முற்றங்கள் தோறும் வந்து நிறைய (அம்மாடங்கள் உயர்ந்து விளங்கின என்றபடி.)

***


குழலும் வீணையும் யாழும் என்று
        இனையன குழைய
மழலை மென்மொழி கிளிக்கு
        இருந்து அளிக்கின்ற
சுழலும் நல்நெடும் தடமணிச்
        சுவர்தொறும் துவன்றும்
நிழலும் தன்மையும் மெய்ம்மை
        நின்று அறிவரு நிலைய