பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

கம்பன் சுயசரிதம்

என்று பாட்டு இமையவர் இடுக்கண் தீர இராவணவதம் நடந்தாக வேண்டும். இராவண வதம் நடக்க இராமன் காடு வந்து சேர வேண்டும். இராமனைக் காட்டிற்கு அனுப்ப கூனியாகிய மந்தரை சூழ்ச்சி செய்யவும் சிற்றன்னையாகிய கைகேயி வினை சூழவும் வேண்டும். ஆகவே எங்கே பற்ற வைத்த தீ எங்கு சென்று மூளுகிறது என்று நமக்குத் தெரிகிறது. இப்போது இராமன் முடி சூடுவதைத் தடுக்க முனையும் கூனி காவிய அரங்கத்திலே தோன்றுவதைக் கூட கம்பன்

இன்னல் செய் இராவணன்
      இழைத்த தீமை போல்
துன்னரும் கொடு மனக்
      கூனி தோன்றினாள்.

என்றுதான் கூறுகின்றான். இலக்குவன் சூர்ப்பன்கையின் மூக்கை அறுத்து மானபங்கம் செய்தான்.

உயிர் மூக்கினை நீக்கிய முறையை
மலைது மித்தென இராவணன்
     மணியுடை மகுடத்
தலைதுமித்தற்கு
     நாள் கொண்டது ஒத்ததாகவே

படுகிறது அவனுக்கு. ஏன் கடைசியிலே இராவணன் இராமன் அம்பால் அடியுண்டு உயிரற்று வீழ்ந்து கிடக்கிறபோது அவன் மனைவியாகிய மண்டோதரி அழுது புலம்பினாலும்

காந்தையருக்கு அணியனைய
     ஜானகியார் பேரழகும்
         அவர்தம் கற்பும்