பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

கம்பன் சுயசரிதம்

பாக்கியம் புரிந்த எல்லாம்
     குவிந்து இருபடிவம் ஆகி
மேக்குயர் தடந்தோள் பெற்று
     வீரராய் விளைவு என்பான்

என்பது கம்பன் பாடல்.

இந்த Close up காட்சியோடு சுக்ரீவன் திருப்தி அடையவில்லை. இவர்கள் யாராயிருத்தல் கூடும் என்று அவர்களை ஊடுருவி நோக்கியே அவர்களுடைய அவதாரத்து உண்மையையும் ரகசியத்தையுமே உணர்ந்து கொள்கிறான். இது ஒரு Xray படம் எடுத்தது போலவே அமைந்துவிடுகிறது. தேவர்கள் குழுவில் ஒரு பிரம்மா ஒரு இந்திரன், ஒரு சிவன் என்றெல்லாம் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் மூல மூர்த்தியாம் பரம்பொருள் தெய்வமாக இருப்பதில் திருப்தி அடையாமல் மண்ணுலகில் மனிதனாக அவதரித்து மக்களைப் போல் மானுடனாகவே வாழ்ந்து அவர்களது இன்ப துன்பங்களை அனுபவிக்க விழைகிறார்கள். ஆம் தேவர் உலகையும் இந்த மானுடம் வென்று விடுகிறது என்பதனை ஆய்ந்து தெளிந்து விடுகிறான் சுக்ரீவன். சுக்ரீவன் தெளிந்தானோ இல்லையோ கம்பனுக்குத் தெளிவு ஏற்பட்டு விடுகிறது. அதை அவன் பாடுகிறான்.

தேறினன் அமரர்க்கெல்லாம்
     தேவராய் தேவர் என்றே
மாறி இப்பிறப்பில் வந்தார்
     மானுடராகி மண்ணோ
ஆறுகொள் சடிலத்தானும்
     அயனும் என்று இவர்களாதி
வேறு குழுவை எல்லாம்
     மானுடம் வென்ற தன்றோ.

என்று முத்தாய்ப்பே வைக்கிறான்.