தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்
163
தண்டாத வாழினி
துடித்த துனிவார்த
உண்டாள் உடல் தடித்தாள்
வேறொருத்தி ஒக்கின்றாள்
என்றல்லவா பாட வந்திருக்கிறது. அவளுக்கு கண்டாள் கருணனை என்றும், அவன் கடவுள் தாளிணை என்றும் பாட முடிந்திருக்கிறாரே அவனால், அதில் எண்ணங்கள் அவள் மூளையில் Overlap பண்ணும் காட்சியை அல்லவா காட்டிவிடுகிறான். பழைய நிகழ்ச்சிகள் அவள் எண்ணத்தில் எப்படி தோன்றுகின்றன. தோன்றுவதை காவியத்தில் எப்படிக் காட்ட முடியும் என்பதையும் அல்லவா பாடியிருக்கிறான்.
இப்படியே கம்பன் காவியத்தில் பல காட்சிகளைக் காட்டலாம். அதன் மூலம் அவன் சினிமா உத்திகளில் எவ்வளவு தேர்ந்திருக்கிறான் என்பதையும் தெரிந்து கொள்ளலாம் நாம். ஆம் கம்பன் ஒரு தேர்ந்த டைரக்டரே என்று ஒரு சபாஷ் போடலாம்.
இப்படி என்றால் சினிமாக்கலை தமிழ்நாட்டிற்கு வந்து ஐம்பது வருஷங்கள் தானா ஆயிற்று ஆயிரம் வருஷங்கள், ஆகவில்லையா என்று கேட்கத் தோன்றுகிறது எனக்கு சரி பொன்விழா மகிழ்ச்சி அல்ல வைரவிழா நடத்தலாம். இல்லை ஒரு பன்னூற்றாண்டு விழாவே கொண்டாடலாம் நாம்.
❖❖❖