பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

167


அன்னை தடுத்தாலும்
     அண்ணன் அடித்தாலும்
பின்னைச் செயலறியேன்
     பிள்ளைப் பிராயத்தில்.

பள்ளிக்குச் செல்லும்
     பருவம் அடைந்ததன்பின்
தெள்ளத் தெளிந்துள்ள
     தெண்ணீர்க் கயங்கண்டால்
உள்ளம் பறிகொடுத்து
     உற்று உற்று நோக்கிடுவேன்
பள்ளத்தில் பாய்கின்ற
     பனிநீரின் ஓடையிலே
கல்வியொடு கவிதை
     கணக்கில்லா சாத்திரத்தை
பல்விதமாய்க் கண்டு
     படித்து மகிழ்ந்திடுவேன்.
சுழித்தோடிக் குமிழியிடும்
     சுழன்று சுழன்று நிலம்
குழித்தோடிக் குதித்து வரும்
     குவலயத்தில் எம்பொருநை.
வற்றாத நீர் நிறைந்து
     வசியோடு வளம்பெருக்கி
கற்றாவின் மடிபோல
     கலன் நிறைத்துப் பசியகற்றும்
எத்தனைநாள் அவள் மடியில்
     இனிதாய்க் கிடந்துறங்கி
நித்தம் அவளோடு
     நீந்திப் புனலாடி
சித்தம் மயங்கிச்

     சிந்தை பறிகொடுத்து