பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

கம்பன் சுயசரிதம்

புத்தம் புதிய சுவை
      புதுமலரின் வாசமுமே
பெற்றதெல்லாம் சொன்னால்
      பேதலிக்கும் உங்கள் உளம்
கற்றுத் தெளிவதுவோ
      கன்னி தருவதெல்லாம்.

இன்னும் வயதேறி
      இங்கிதம் அறிந்தபினர்
மன்னும் பொதியை இடை
      வழிந்தோங்கும் வடஅருவி
கண்டேன் களித்தேன்
      காணறிய காட்சியென்று
மண்டுபெருங் காதலுடன்
      மாந்தி உடல் தடித்தேன்.
குற்றால மலையிருந்து
      குதித்துக் குதித்து வரும்
சிற்றாற்றங் கரையினிலே
      சிறியேன் சிலநேரம்
நின்றேன் நினைப்பொழந்தேன்

      நீள்உலகின் துயர் மறந்தேன்.


அத்தோடு,

தென்றல் சிலுசிலுப்பில்
      தெய்வ ஒளி கண்டேன்.
பித்தம் தெளியவைத்து
      பிணிஅகல வினைசெய்து
நித்தம் குளித்திடவும்
      நேராகத் தானழைத்து
உடல் குளிரச் செய்வதடன்

      உயிர் தழைக்க ஊட்டுவதை