பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

169

வட அருவி ஆடிடுவோர்
     வாகாய் உணர்ந்திடுவர்.,
நேற்றுவரை தரையினிலே
     நேராய் நடந்தநதி
இற்றைக்கு எழுந்திருந்து
     எக்களிப் போடாடுவதும்,
விண்கிழித்து ஒழுகுகின்ற
     வண்ணமலர்த் தாரையினில்
வானவில்லின் ஜாலமெல்லாம்
     வகைவகையாய்த் தோற்றுவதும்
உள்புகுந்து அருவியிலே
     உல்லாசமாய் ஆடி
விள்ளற்கரிய தொரு

     வித்தகங்கள் பேசுவதும்


இன்னும் இது போன்று

எத்தனை அனுபவந்தான்
     எம்மான் அருளாலே
நித்தம் நான் பெற்றேன்
     நிமலன் அடிபணிந்தேன்.

மழையோடும் அருவியோடும்
     மாட்சிபெறும் ஆற்றோடும்
இழைந்து பலகாலம்
     இனிதாய்க் கழித்ததின்பின்
அன்றொருநாள்க் காலையிலே
     அலைவாய்க் கரைசேர்ந்து
நின்றேன் நிமிர்ந்தேன்
     நீலப் பெருங்கடலைக்கண்ணுற்றேன்
ஓஎன்ற ஓசையிலே

     உள்ளம் சிலிர்த்ததுகாண்