பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

கம்பன் சுயசரிதம்

தெள்ளத் தெளிந்த தமிழ்
     தேன்பாகில் ஊறவைத்து
இன்பச் சுவைஉணரும்
     இனிதான வாய்ப்புணர்த்தி
இன்னிசையில் பாடியவன்
     எங்களவன் பாரதிதான்.
அன்னவன்றன் பாட்டினிலே
     அறியாப் பருவமதில்
கன்னல் சுவை அறியும்

     கனிவை நான் பெற்றிருந்தேன்.


அத்தோடு

குயில்வந்து கொம்பிருந்து
     கொஞ்சி இசைப்பதையும்,
மயிலாடி நடம்புரிந்து
     மனம்மகிழ வைப்பதையும்,
தேனோடு தினைமாவும்
     தித்திக்கும் முக்கனியும்
காணக் குழலிசையும்
     கனிவண்டின் ரீங்காரம்
எல்லாம் கலந்ததொரு
     இனிய கலவையைப் போல்
சொல்லாலும் இசையாலும்
     சொக்கவைப்பான் பாரதியே.
பாப்பாவின் பாட்டினிலே
     பறிகொடுத்த நெஞ்சுடனே
சாப்பாட்டை யும் மறக்கும்
     சாதனையைப் பெற்றவன்நான்.
பாரதியின் பாட்டைவிட
     பண்ணோசை மிக்கொலிக்கும்
தாரகையே எங்கள் தமிழ்
     தேசிய விநாயகனாம்.