பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

175

புந்தியொடு உளமுருக்கும்
      புகழ்க்கவிதை வளம்நிறைந்து
வற்றாத முக்கூடல்
      வகையான பள்ளோடு
குற்றாலக் குறவஞ்சி
      கூறாத இன்பமுண்டோ?

இன்னும் இதுபோன்று
      எத்தனையோ இலக்கியங்கள்
என் கவிதைக் காதலினை
      இனிதாய் வளர்த்ததுகாண்.

சிற்றாறு என்றாலும்
      சிந்தை மகிழ்வித்து
பெற்ற முடைச் சிறியர்
      பெரிய மனம் போல
ஆற்றொழுக்கின் கதியினிலே
      அணிசிறந்த இசைபேசி,
காற்றில் மிதக்குமொரு
      கவிதை உலாவருமே.
சலசலக்கும் சிற்றோடை
      சாந்தி தருவதையும்
பலபலவாம் வண்ணமதை
      பனிநீர் அருவியிலே
கண்டு களிக்கின்ற
      கவிதைச் சுகமெல்லாம்
பண்டறியா விட்டாலும்

      பார்க்கத் திறனுண்டு.