பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

கம்பன் சுயசரிதம்

இப்படியே,

எண்ணற்ற கவிதைகளை
      இனிதாகத் தான்மாந்தி
நண்ணுகின்ற நதியழகும்
      நாடுகின்ற அருவிதரும்
இன்ப உணர்வை யெல்லாம்
      எளிதாய் நான் பெற்றபின்தான்
கம்பனது காவியமாம்
      கரையருகே வந்துநின்றேன்.
காவியப் பெருங்கடலைக்
      கண்ணுற்ற போழ்தினிலே
ஓவியமாய் உணர்விழந்து
      உன்மத்த மெய்திவிட்டேன்.
எவ்வளவு பரந்த கடல்
      எவ்வளவு விரிந்த நிலை
இக்கடலின் எல்லையினை
      எப்படி நாம் கண்டுகொள?
அகலமதை அளந்தாலும்
      ஆழம தை அறிய
சகல கலா வல்லவனும்
      சாதித்தல் கூடிடுமோ?

அலைமேல் அலைவந்து
      அழகான முத்தையள்ளி
மலையாய்க் குவிப்பதுபோல்
      மன்னன் கவி சொல்வான்.
விண்ணில் ஒளிருகின்ற
      மீனித்தைப் போலெல்லாம்
கண்ணிற் கினிய பல

      காட்சிகளைத் தந்திடுவான்.