இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12. கம்பன் என் பகைவன்
“வாருங்கள் வாருங்கள்
வணக்கம் யாம்செய்கின்றோம்,
பாரிடத்தல் எங்களையே
பார்ப்பதற்காய் வந்ததற்கு
பாராட்டுகின்றோம் யாம்
பக்கத் திருந்திடுவீர்
பேரவாவோடு உம்வரவை
பேணிஎதிர் பார்த்திருந்தோம்
நாலாறு நாட்பொழுதாய்
நாங்கள்எல் லாருந்தான்.
காலையில்தான் வீட்டுள்ளே
கடும்பகலில் ஆபிசில்
மாலையிலே இங்குவந்து
மகிழ்வோடு தானிருந்து
வேலைதரும் தளர்வை
விரட்டி விடலாகாதோ?”
என்றெனையே வரவேற்றார்
என்றனது அன்பர் சிலர்
அன்றொரு நாள் மாலையிலே