பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

181

பொன்னி யெனுந்தெய்வப்
     புனலாலே வளம்பெருக்கும்
கன்னியவள் காவிரியின்
     காதல் மடிதவழ்ந்து
தெள்ளத் தெளிந்தோடி
     தென்றல் இசை பரப்பி
உள்ளத்தில் உவகையினை
     ஊட்டுகின்ற ஓரிடத்து
ஓங்குகின்ற மரத்துடே
     உதிக்கின்ற நிலவொளியில்
பூங்குலைகள் தூங்குகின்ற
     பொழிலடுத்து மணற்பரப்பில்
வீற்றிருந்தார் அன்பர்
     விரைந்தங்கு சென்றேன் யான்
போற்றி அவர் உரைத்த
     பொன்னுரைக்குத் தலைவணங்கி
அன்பர்களே! அறிஞர்களே!
     அஞ்சாறு நாட்கணக்கில்
இன்பம் நுகர்வதற்கும்
     இனிதான கூட்டுறவை
நாடிவர மனமிருந்தும்
     நற்பொழுது வாய்க்கவிலை
வீட்டிருந்து செயவேண்டும்
     வேலைஇருந்தது காண்
என்று தெரிவித்து
     எங்கெங்கோ சிந்தனையைச்
சென்றுவர விட்டு
     சேர்ந்தேன் அவர்பக்கல்
காரியந்தான் என்னவென்று

     கணக்கிடவே நானறிவேன்