பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

கம்பன் சுயசரிதம்

புவனம் முழுவதுமே
     போற்றிப் புகழ்கிறது
வடநாட்டு வான்மீகி
     வன்மமொடு திராவிடரை
திடமாக இழிவுசெயத்
     தீட்டிவைத்த அக்கதையை
இந்தப் பயல்கம்பன்
     ஏனோ தமிழருக்காய்
சொந்தக் கதையாக்கி
     சொகுசாய் உரைத்திட்டான்.
ராமபிரா னவனாம்
     ராவணனை வென்றவனாம்
நேம மொடுவாழும்
     நீர்மை தெரிந்தவனாம்
என்றெல்லாம் ஆரியனை
     ஏத்திப் பணிந்துநின்று
குன்றனையை வலிபடைத்த
     கோலமுறு வாலியுைம்
தென்னாட்டு வீரனவன்
     தெருளுடைய ராவணனாம
மன்னனையும் மக்களையும்
     மதியாது இழித்துரைத்து
தமிழரெனும் நம்மையெலாம்
     தலைதூக்க ஒட்டாமல்
அமிதிவைத்த வன்என்று
     அறியீரோ நீரெல்லாம்?
கொங்கையோடு அல்குலையும்
     கூசாமல் தான்விளக்கி
மங்கையவர் மாண்பையெலாம்

     மண்ணாக்கி மயலாக்கி,