பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

185

கலையென்றும் ரசமென்றும்
     கவிதைச் சுவையென்றும்
தலைமேலே தூக்கிவைக்கும்
     தாசரெலாம் நீர்தாமே?
கம்பரச மென்பதெலாம்
     காமரச மல்லாது
இம்பர் உலகத்தில்
     எதற்கும் பயனுண்டோ,
இப்படிப் பட்டவனை
     என்பகைவன் என்றுசொலி
தப்ப வழியின்றி
     தகிக்கின்ற தீயிட்டு
தன்மானத் தொடுநாமும்
     தலைநிமிர்ந்து தான்நடக்க
என்உள்ளம் விரைகிறது
     எத்தனையோ நாளாய்த்தான்
என்றுகடுங் கோபமுடன்
     என்மேலே தான்பாய்ந்தார்
நன்றாக இருந்ததொரு

     நண்பர் ஒருதோழர்.


மற்றொரு நண்பரோ,

தோழர் உரைத்த தெலாம்
     தொடர்ந்து நீர் கேட்டுவிட்டீ
ஆழ்ந்தகருத் தொடுநானும்
     அக்காவி யம்படித்தேன்
கவிதைச் சுவையறியும்
     காதுடையேன் ஆனாலும்
புவிதனிலே இக்கதையைப்

     போற்ற முடியஇலை