பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

கம்பன் சுயசரிதம்

வெள்ளைக் கலையுடுத்து
     வீணை கரத்தேந்தி
வெள்ளை அரி யாசனத்தில்
     வீற்றிருக்கும் கலை மகட்கு
பொன்னாலும் பொருளாலும்
     பொற்கோயில் அமையாது
எண்ணத்தால் சிறந்தோங்கும்
     எழிலார் கலைக்கோயில்
கட்டும் ஒரு பணியில்
     கருத்துண்டயோன் கம்பன் என்றால்
இட்டமொடு சிறந்த
     எத்தனையோ கதையிலையோ?
ஆதிசிவன் பெற்றெடுத்து
     அகத்தியனு மேவளர்த்து
ஓதிப் பெருமை கொள
     உயர்ந்தாள் தமிழணங்கு.
தமிழோடு சைவமுந்தான்
     தழைத்து வளர்ந்தஇந்த
தமிழ்நாட்டில் கம்பனுக்கு
     தக்க கதை கிடைக்கலையோ?
பிறவாத யாக்கையுடைப்
     பெரியோன் சிவனிருக்க
இறவாத புகழை யெலாம்
     இராமனுக்கோ ஏற்றுவது?
அறுபத்து மூவருடை
     அழியாப் பெருமையொடு
அறுபத்து நான்காய்
     அமைந்த விளையாடலுமே
ஏற்றமுறும் வகையில்

     எங்கள்சிவ னருளைப்