பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

189

குறிக்கின்ற பொருட்கெல்லாம்
     கொள்ளை விலையேதான்
உடுக்க உடையின்றி
     உண்பதற்கு உணவின்றி
படுப்பதற்கு பாயின்றி
     பரிவின்றி வலியின்றி
பஞ்சமொடு பசியால்
     பரிதவிக்கின்றார் மக்கள்.
நெஞ்சிரக்க மில்லாது
     நினையாது எண்ணாது
கலையென்றும் கவியென்றும்
     கதைபேசித் திரிகின்றீர்
சிலைஒன்று கம்பனுக்குச்
 செயவேண்டும் என்கின்றீர்.
உம்மைப் போலுள்ளவர்கள்
     உதவார்கள் இந்நாளில்.
நம்மையெல்லாம் காப்பதற்கு
     நண்பர் பலர்வேண்டும்
கம்பனோடு நீரும்தான்
     கடும்பகைவன் இனத்திற்கு
நம்பாதீர் இவரையென

     நாவலித்துக் கூறுகின்றேன்.

(என்று ஆர்ப்பாட்டமே செய்துவிட்டார் இந்த நண்பர். மூன்று பேர் கம்பனை என் பகைவன் எம் பகைவன் என்று சொல்லி அவர்கள் கருத்தையெல்லாம் அறுதியிட்டுக் கூறிவிட்டார்கள். உண்மைதானே. கம்பன் இவர்களுக்குப் பகைவன்தான். இவர்கள் மூன்று பேருக்கு மட்டுந்தானா பகைவன்? இல்லை இன்னும் எத்தனையோ பேர்களுக்கு அவன் பகைவன். ஆம் பகைவன்தான்.)