பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

கம்பன் சுயசரிதம்


பாட்டும் உரையும்
    பயில்கின்ற பண்பறியா
ஒட்டைச் செவிபடைத்த
    ஊமையருக் குப்பகைவன்
உள்ளத்தில் எழுகின்ற
    உணர்ச்சிக்கு உருவத்தை
அளிக்கின்ற ஆற்றலினை
    அறியாதார்க் குப்பகைவன்
துன்பம் துடைக்கவல்ல
    தூய கவிதையினை
இன்ப மொடுபாட
    இயலாதார்க் குப்பகைவன்
எங்கும் நிறைந்துள்ள
    எழிலார் இறையருளின்
பொங்குகின்ற பூரணத்தைப்
    போற்றாதார்க் குப்பகைவன்
கண்ணுதல்போல் சடைவிரித்து
    கடலலைமேல் கதிரவனும்
பண்ணிசையோ டாடுவதைப்
    பார்த்தறியார்க் குப்பகைவன்
அந்திதரு சித்திரத்தின்
    அழகினிலே தான்மயங்கி
வந்தித்துப் போற்றி
    வாழ்த்தாதார்க் குப்பகைவன்
கலலினிலும் செம்பினிலும்
    கடவுளையே காட்டுகின்ற
பல்திறத்துச் சிற்பிகளின்
    பண்பறியார்க் குப்பகைவன்
கற்றதனால்ஆயபயன்
    கடவுளையே தொழுதலென