பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

191


முற்றும் உணராத
    மூடர்களுக் குப்பகைவன்
தனக்குவமை இல்லாதான்
    தாளில்ப் பணியாது
மனத்துக்கண் மாசுடைய
    மாக்களுக்கெல் லாம்பகைவன்
அரன்அதிகன் உலகளந்த
    அரிஅதிகன் என்றுரைத்து
பரகதிக்குச் சொல்லமொரு
    பரிசில்லார்க் குப்பகைவன்
சத்தியத்தொடு அஹிம்சை
    சமயத்தில் சமரசமே
நித்தியமும் வாழ்வினிலே
    நிறுத்தாதார்க் குப்பகைவன்
அஞ்சாது திருடாது
    அருள்நெறியில் தான்நின்று
எஞ்சாது பணிபுரியும்
    ஏற்றமிலார்க் குப்பகைவன்
வாய்மையொடு மரபை
    வையத்தில் காப்பதற்கு
துயஉயிரை விடத்
    துணிவில்லார்க் குப்பகைவன்
கள்ளத்தால் பிறர்மனையைக்
    கொள்ளத்தான் குறிக்கொண்டு
உள்ளத்தால் உன்னுகின்ற
    உலுத்தர்களுக் குப்பகைவன்
வாழ்வாங்கு வையகத்தில்
    வாழத் தெரியாமல்
பாழும் நெறிகளிலே

    பட்டலைவார்க் குப்பகைவன்