இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
192
கம்பன் சுயசரிதம்
எல்லாப் பெருஞ்செல்வம்
எல்லோரும் எய்துதற்கு
வல்லான் உரைத்ததனை
வகுத்தறியார்க் குப்பகைவன்
அறிவின்மைக் குப்பகைவன்
அன்பின்மைக் குப்பகைவன்
வறியவர்க்கு வழங்குமொரு
வண்மையிலார்க் குப்பகைவன்
தமிழறியார்க் குப்பகைவன்
தகவில்லார்க் குப்பகைவன்
அமுதினையே மாந்த
அறியா தார்க்குப் பகைவன்
வெண்மைக் குப்பகைவன்
வெறியருக் குப்பகைவன்
ஒண்மை அறிவில்லா
ஒன்னார்க் குப்பகைவன்
பகைவன் பகைவன்எனப்
பல்லோரும் சொன்னாலும்
பகைவனுக்கும் அருளுமொரு
பண்புடையோம் ஆனதினால்
கம்பன் திருநாளில்
கவிஞனவன் வாழ்கஎனப்
பம்பும் உணர்ச்சியுடன்
பல்லாண்டு கூறிடுவோம்.
கம்பன் வாழ்க!
வாழ்க வாழ்க!
கம்பன்புகழ் வாழ்க!
வாழ்க! வாழ்க!
கன்னித்தமிழ் வாழ்க!