பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

கம்பன் சுயசரிதம்


எல்லாப் பெருஞ்செல்வம்
    எல்லோரும் எய்துதற்கு
வல்லான் உரைத்ததனை
    வகுத்தறியார்க் குப்பகைவன்
அறிவின்மைக் குப்பகைவன்
    அன்பின்மைக் குப்பகைவன்
வறியவர்க்கு வழங்குமொரு
    வண்மையிலார்க் குப்பகைவன்
தமிழறியார்க் குப்பகைவன்
    தகவில்லார்க் குப்பகைவன்
அமுதினையே மாந்த
    அறியா தார்க்குப் பகைவன்
வெண்மைக் குப்பகைவன்
    வெறியருக் குப்பகைவன்
ஒண்மை அறிவில்லா
    ஒன்னார்க் குப்பகைவன்

பகைவன் பகைவன்எனப்
    பல்லோரும் சொன்னாலும்
பகைவனுக்கும் அருளுமொரு
    பண்புடையோம் ஆனதினால்
கம்பன் திருநாளில்
    கவிஞனவன் வாழ்கஎனப்
பம்பும் உணர்ச்சியுடன்
    பல்லாண்டு கூறிடுவோம்.

கம்பன் வாழ்க!
    வாழ்க வாழ்க!
கம்பன்புகழ் வாழ்க!
    வாழ்க! வாழ்க!
கன்னித்தமிழ் வாழ்க!

    வாழ்க! வாழ்க!