தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்
25
நான் – தெரிகிறது ஐயா! தெரிகிறது. ஆனால் காவியம் எழுதும்போது தமிழ்நாட்டுக்கு ஒவ்வாத நிகழ்ச்சிகளை காவியத்தில் சோத்திருக்கிறீர்களே, அதற்கென்ன சொல்கிறீர்கள்.
கம்பன் எதைச் சொல்கிறாய்? வில்லொடித்த வீரனே சீதையைப் பரிசாகப் பெறுகிறான் என்பதைத்தானே. ஆம் அந்த நிகழ்ச்சியை என்னால் மாற்ற முடியவில்லைதான். மாற்றினால் மூலக் கதைக்கே முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டியதுதான். வில்லொடித்த நிகழ்ச்சியை காவியத்திலிருந்து நீக்க விரும்பவில்லை. ஆனால், அதைத் தமிழ்ப் பண்புக்குப் பழுதுவராத வகையில், எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறேன் என்பதைத்தான் நீ அறிவாயே. என்னுடைய சீதை இருக்கிறாளே அவள் ஒன்றும் அறியாப் பேதை அல்ல. கன்னிமாடத்திலிருந்தே முனிவர் முன்செல, தம்பி பின்வரச் சென்ற ராமனைக் காண்கிறாள். அண்ணலும் நோக்குகிறான் அவளும் நோக்குகிறாள். இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்துகிறார்கள். பின்னால் வில்லொடித்த விவரம் கேட்கிறாள். என்றாலும் வில்லொடித்த காரணத்திற்காக மட்டும் அவனைத் தன் காதலனாக ஏற்றுக் கொள்கிறாள் இல்லை. தன் தோழி நீலமாலை சொல்லும்
- கோமுனியுடன் வரும் கொண்டல்
- என்ற பின்
- தாமரைக் கண்ணினான்
- என்ற தன்மையால்
- கோமுனியுடன் வரும் கொண்டல்
ஆம், அவனே கொல் என்று ஐயம் நீங்குகிறாள். இது மட்டுமா?
- சொல்லிய குறியின்
- அத் தோன்றலே அவன்
- அல்லனேல் இறப்பன் என்று
- சொல்லிய குறியின்
வேறே அகத்து உன்னுகிறாள். இப்படியெல்லாம் இடர்ப்பட்டு, இடர்ப்பட்டுக் கதையை உருவாக்கியிருக்கிறேன்.