பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

79


அவதார மூர்த்தி - இராமன்

வாலியால் துரத்தப்பட்ட அவன் தம்பி சுக்ரீவன், அனுமன் முதலிய வானர வீரர்களோடு கிஷ்கிந்தையை அடுத்த ஒரு மலையிலே ஒளிந்து வாழ்கிறான் இந்த மலைப்பக்கமே வருகின்றனர் ராமனும் இலக்குவனும், இருவரையும் எதிர்சென்று கண்டு அளவளாவி, அவர்களது நட்பை சுக்ரீவன் பெறவைத்தால், வாலியை வெல்லலாம் என நினைக்கிறான் அனுமன். அவர்களை அழைத்துக்கொண்டு சுக்ரீவன் இருக்கும் இடம் வருகிறான். தூரத்தே வருகின்ற ராம லக்குமணர்களைச் சுக்ரீவன் பார்க்கிறான். ஏதோ அவர்கள் தவக்கோலம் பூண்டிருந்தாலும் அவர்கள் முகத்தில் அழகு சுடர்விடுகிறதைக் காண்கிறான். இதைச் சொல்கிறான் கம்பன்.

கண்டனன் என்ப மன்னோ
   கதிரவன் சிறுவன், காமர்
குண்டலம் துறந்த கோல
   வதனமும், குளிர்க்கும் கண்ணும்
புண்டரி கங்கள் பூத்துப்
   புயல்தழீஇப் பொலிந்த திங்கள்
மண்டலம் உதயம் செய்த
   மரகதக் கிரி அனானை

தூரத்திலே வருகிறபோது சுக்ரீவன் காணுவது மரகத மலை என வளர்ந்த தோள்களையுடைய அழகர் இருவரை. இந்த மதனன் அஞ்சுறு வடிவினர், இன்னும் கொஞ்சம் நெருங்கியே வருகிறார்கள். அவர்களை அப்போதுதான் கூர்ந்து நோக்குகிறான். இவர்கள் ஏதோ அழகு நிறைந்த புருஷர்கள் மாத்திரம் இல்லை. நல்ல வலியுடைய வீரர்களாக அல்லவா தெரிகிறது. ஏதோ இந்த உலகம் தவம் செய்து பெற்ற வீரர்களே இவர்கள் என்று அறிகிறான். இதையும் சொல்கிறான் கம்பன்.