பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

89

கதை தெரியும். அவர் கலெக்டராக வந்த அந்த வருஷத்திலே (1795 இல்) ஏரி உடைப்பு எடுத்து அதனால் மக்களுடன் சர்க்கார் அடைந்த நஷ்டங்களைப் பற்றியெல்லாம் விவரங்கள், குறிப்புகளை எல்லாம் படித்திருக்கிறார். ஆதலால் 1798 இல், இந்த ஏரிக்கரையைப் பலப்படுத்த விசேஷ சிரத்தை எடுத்திருக்கிறார். மழைக்காலம் முழுவதும் இங்கேயே மராமத்து இலாகா அதிகாரிகளுடன் முகாம் செய்வது என்று திட்டமிட்டுக் கொள்கிறார். தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கவே முனைந்திருக்கிறார். அப்படி முகாம் பண்ணிய போது, ஏரியை, நகரை எல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தவர் கோதண்டராமசாமி கோயில் வாயிலுக்கும் வந்திருக்கிறார். கோயில், கோயில் கோபுரம் எல்லாவற்றையும் கண்டு அதிசயித்து நின்ற துரைமகனை, அர்ச்சகர்களும், ஊர்ப் பிரமுகர்களும் கோயிலுக்குள் வந்து மற்ற அழகுகளையும் காண அழைத்திருக்கின்றனர். அவரும் காலில் உள்ள பாதரட்சைகளை எல்லாம் கழற்றி வைத்துவிட்டு கோயிலுக்குள் நுழைந்து வெளிப் பிரகாரத்தைச் சுற்றி வந்திருக்கிறார். அங்கு ஓரிடத்தில் கற்கள் பல குவித்து வைத்திருப்பதைப் பார்த்து இவை ஏன் இங்கு குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன என்று கேட்டிருக்கிறார். அங்குள்ளவர்கள் ‘இங்கு கோயில் கொண்டிருப்பவர் சக்ரவர்த்தித் திருமகனான ராமன். அவருடைய தர்மபத்தினி ஜானகிக்கு என்று ஒரு தனிக் கோயில் இல்லை. அந்தத் தலைவிக்கு ஒரு கோயில் கட்டலாம் என்றே கல் எல்லாம் சேகரித்தோம். ஆனால் கட்டி முடியவில்லை. வருஷா வருஷம், விளைச்சல் இல்லாத காரணத்தால் மக்களிடமும் போதிய பணம் வசூலிக்க முடியவில்லை. கோயில் கஜானாவிலுமே பணம் இல்லை. அதனால்தான் எடுத்த காரியம் தடைபட்டுக் கிடக்கிறது’ என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் கேட்ட கலெக்டரோ கொஞ்சம் ஏளனமாகவே, ‘என்ன ஐயா உங்கள் சாமிக்கு இந்த ஏரி உடையாமல் பார்த்துக் கொள்ளத் தெரியவில்லை.