பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

269



ராவணன் வஞ்சகத்தை எதிர்த்து வந்திருக்கிறான்” என் இராமனிடம் உரைத்தனர்.

இராமன் அவசரப்பட்டு எதையும் முடிவு செய்ய விரும்ப வில்லை; அவன் அரசமகன்; மற்றவரைப் பேசவிட்டுத் தன் இருப்பிடத்தை ஒர் ஆலோசனை மண்டபம் ஆக்கினான்; சுருசுருப்பாய்ச் சுக்கிரீவன் தன் கருத்தை உரைத்தான்.

“வந்தவன் ஒரு சந்தர்ப்பவாதியாகத்தான் இருக்க வேண்டும்; அவனுக்கு அடிப்படையில் நாட்டுப்பற்று இல்லை; அவன் பற்று வேறு: “நாட்டை உம்மிடம் கேட்டுப் பெற்று ஆட்சி செய்ய வேண்டும்” என்று விரும்புகிறான். இராவணனோடு இதற்குமுன் மாறுபட்டவன் அல்லன்; இன்று அவன் வேறுபடுகிறான் என்றால், அவன் ஒரு துரோகியே” என்றான்.

சாம்பவான் வயதில் மூத்தவன்; அனுபவசாலி, ஆர அமர எதையும் சிந்தித்துப் பேசக் கூடியவன். அவன் பழமைவாதி, சாதிப்பற்று மிக்கவனாய்க் காணப்பட்டான்.

“வந்தவனோ, அரக்க சாதி, நீதியால் வேறுபட்டு, இவன், இங்கு வந்து சேர்கிறான்; ஒருமுறை இவனை ஏற்றுக் கொண்டால் பிறகு அவனை வெளியேற்ற முடியாது. தஞ்சம் அடைந்தவனை எக்காரணத்தைக் கொண்டும் வஞ்சகன் என்று தள்ள முடியாது; மாரீசன் பொன்மானாய் வந்து நம்மை மயக்கினான்; இவன் நன்மகனாக வந்து நயக்கிறான். இருவருக்கும் வேறுபாடு கிடையாது” என்றான் சாம்பவான்.