பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

கம்பராமாயணம்



அந்நேரத்தில் கும்பகருணன் போரில் மடிந்த செய்தி இராவணனுக்கு எட்டியது; ஆறாத் துயரத்தில் ஆழ்ந்தான்; ‘தம்பியை இழந்தது ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்பதை உணர்ந்தான்; போர்க்களத்தை நோக்கி அவன் சிந்தனை சுழன்றது.

அங்கிருந்த திரிசடை சீதைக்கு ஆறுதல் கூறினாள்; வந்தவன் சனகன் அல்லன்; நடிப்பு, என்று கூறி அவளைத் தெளிவுபடுத்தினாள்; ‘அலைகள் ஒய்வதில்லை’ என்பதை அறிந்து அவள் தெளிவு பெற்றாள்.

இந்திரசித்துடன் போர்

தம்பியைக் களப்பலி யாக்கியபின் ‘அடுத்த தளபதி யார்?’ என்று நாடினான். இராவணன் இளைய மகன் துடிப்பு மிக்கவன், துயர் அறியாதவன்; கொட்டிலில் கட்டி வைத்த இளங்கன்று; அது துள்ளிக் குதித்தது. ஆம் அவன்தான் அதிகாயன்! அடுத்து அவன் அனுப்பட் பட்டான், இராமனுக்கு இளயவனைச் சந்தித்தான். அவனோடு தன்வீரத்தைக் காட்டி விளையாடினான் படுகளத்தில் உயிர் விட்டான்.

செய்தி அறிந்து இராவணன் செயலற்றான் அரக்கியர் இராவணன் அருமைமகன், இறந்தது கேட்டு அழுகையால் அதனை அம்பலப்படுத்தினர்; “முத்தவன் இருக்க இளையவன் மடிந்தது ஏன்? முறைமாறி நடந்து கொண்ட தந்தையிடம் சொல் மாரிபெய்து, “என்னை அனுப்பி வைக்காமல் தம்பியை அனுப்பி வைத்தது முறையா?” என்று கேட்டான் இந்திரசித்து.