பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

கம்பராமாயணம்



இவர்கள் துணைகொண்டு சீதையைத் தேடி அடை வாயாக” என்று இறுதியில் கூறினான்.

தன் தம்பியைப் பார்த்து அவனுக்கு அறிவுரைகள் சில கூறினான்.

“இராமனுக்கு ஏவல் செய்யும் பேறு பெற்றிருக் கிறாய்; நீ உன் கடமைகளினின்று தவறக் கூடாது; பெரியவர்கள் சவகாசம் நெருப்புப் போன்றது; நீங்கினால் குளிர் காயமுடியாது; நெருங்கினால் சுட்டு எரித்துவிடும்; “மேல் மட்டத்து வாசிகள் அடிமைகள் செய்யும் தவறுகளை மன்னிப்பார், என்று நினையாதே; அவர்களுக்குப் பயன்படாவிட்டால் தூக்கி எறிந்துவிடுவர்; மன்னர்கள் அடிமைகளை மன்னிக்கமாட்டார்கள்; பெரிய இடத்து உறவு கத்தி முனையில் நடப்பது போன்றது; கவனமாய் நடந்துகொள்” என்பது அவன் அறிவுரை.

வாலி மைந்தனான அங்கதன், தன் தந்தை மரண மறிந்து விரைந்துவந்தான்; சாகும் தருவாயில் இருந்த வாலியைப் பார்த்துப் பலவாறு கூறிப் புலம்பினான்.

“என் தந்தையே! எமன் வருதற்கு அஞ்சும் உன்னை மரணம் எப்படித் தழுவியது? இனி இராவணன் உன்னைப் பற்றிய அச்சம் நீங்கி நிம்மதியாய் வாழப் போகிறான்; இதுஉறுதி, பாற்கடலைக் கடையத் தேவர்க்கு உன்னைத் தவிர உதவ யார் இருக்கிறார்கள்? அமுதத்தைத் தேவர்களுக்கு ஈந்து, மரணத்தை நீ ஏற்கிறாய் என்றால், உன்னைவிடக் கொடையாளி யார் இருக்க முடியும்?”