சுந்தர காண்டம்
233
அவள் கடற்புயலை முன்நின்று தடுக்கும் பெருமலை போலக் குறுக்கே நின்றான்.
“அஞ்சனை மகனே! அரக்கி மகள் நான்; கோரப் பசியால் சோர்வுற்று இருக்கிறேன்; உன்னைத் தின்று சுவை காண விழைகிறேன்” என்றாள்.
பேருருவம் கொண்டு இடைமறித்த அவள், அங்காந்து நிற்க அவள் வாயில் புகுந்து வெளியேறினான்; உருவத்தைச் சுருக்கி, வாயுள்ளே புகுந்து வெளியே வந்து பிறகு உடம்பைப் பெருக்கிக் கொண் டான்; பேருருவம் படைத்த அவன், சிற்றுருவம் படைக்கவும் வல்லன் என்பதைக் காட்டினான்.
அங்கார தாரகை
அடுத்து அவனைத் தடுத்து நிறுத்தினாள் அங்கார தாரகை என்னும் அரக்கி ஒருத்தி; அவளைக் கண்டு அவன் இரக்கம் காட்டவில்லை; அவன் வாயுள் புகுந்து வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தான்; அவன் பறக்கும் காற்றாடியானான்; அவனைத் தொடர்ந்து நூலாக அவள் குடல் பின் தொடர்ந்தது.
தடைகள் மூன்றும் அவனிடம் விடைபெற்றுக் கொண்டன. கடலைக் கடந்த அவன் கால்கள் பவழ மலையில் பதிவு செய்தன; அம் மலை இலங்கையின் எல்லையில் இருந்தது.
காவல் தெய்வம்
காவல் தெய்வம் ஒருத்தி இரவணன் ஏவலை ஏற்று அங்கு நின்று தடுத்தாள்.