பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

265



“சுட்டது குரங்கு, கெட்டது கடி நகர்; பட்டனர் சுற்றமும் நட்பும்; கிட்டியது இழிவும் பழியும்; அழிவு செய்த அனுமன், சென்றவழி தெரியாமல் தப்பி விட்டான். இனிச் செய்யத் தக்கது யாது; “” என்ற வினாவை எழுப்பினான் இராவணன்.

“கரன் சிரத்தை இழந்தான்; சூர்ப்பனகை செவியையும் மூக்கையும் இழந்தாள்; வீரர் மனைவியர் தாலியை இழந்தனர்; சித்திர நகர் எழிலை இழந்தது; நாம் மானத்தையும் புகழையும் இழந்தோம்” என்று இழப்புகளை அடுக்கிக் கூறினான்.

மகேந்திரன், துன்முகன், பிசாசன் முதலிய படைத் தலைவர் நாடக வசனம் பேசினர்: “படை எழுப்பி எதிரிகளைத் துடைப்பதுதான் செய்யத் தக்கது” என்ற கருத்தைச் சொல்லினர்.

உடன் பிறந்த தம்பியாகிய கும்பகருணன் மட்டும் அதற்கு உடன்படவில்லை; திடமுடன் தான் கருதியதை எடுத்து உரைத்தான்; அடிப்படைத் தவற்றை எடுத்துக் கூறினான்; ‘சீதையைச் சிறை பிடித்தது இராவணன் செய்த தவறு’ என்றான்; ‘இராமனை அடைந்து மன்னிப்புக் கேட்பதுதான் பெருமை’ என்றான்; தொட்ட இடத்தில் அவளைக் கொண்டு விடுவித்தால் அது தூய செயலாகும்; அன்றி, வீரம் பேசினால் அதனையும் திறம்படச் செய்ய வேண்டும்; படை எல்லாம் கூட்டி, ஒரு சேரச் சென்று தாக்குதலே நடைமுறைக்கு ஏற்றது” என்று கூறினான்.

வயதால் இளைஞன், வாலிபப் பருவத்தினன்; இராவணன் வீரமகன் இந்திரசித்து மூத்தோர் வார்த்தை