பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யுத்த காண்டம்

299



“தம்பியைக் கொன்ற கொடியவன் யார்?” என்று கேட்டு அறிந்தான்; இலக்குவனைத் தன் இலக்காகக் கொண்டு போர் தொடுத்தான் இளஞ்சிங்கங்கள் களத்தில் முழக்கம் செய்தன; இடிகள் மாறிமாறி இடித்தன; மழை பெய்யவில்லை; நேருக்கு நேர் சந்தித்தால் வேருடன்தான் அழிய வேண்டும் என்பதை இந்திரசித்து உணர்த்தான்; வீரம் வளைந்து கொடுத்தது; சூழ்ச்சி முன்னால் நின்றது; விண்ணில் பறந்து, கண்ணுக்குக் தெரியாமல் மறைந்தான்; “அவன் போர்க்களத்தை விட்டுப் புறமுதுகு இட்டான்” என்று இலக்குவன் தவறாய்க் கருதினான்; இந்திரசித்தின் தித் திட்டம் அறியாது வாளா இருந்துவிட்டான்.

இராவணன் இட்ட ஆணையின்படி இலக்கு வனையும் அனுமனையும் நாகபாசம் கொண்டு பிணிக்கத் திட்டமிட்டான்; அவர்கள் சோர்வாய் இருந்த நேரத்தில் அரவக்கயிறுகள் கொண்டு இருவரையும் பிணித்து வைத்தான்; கட்டுண்டவர்கள் தப்பவழி தெரியாமல் டுமாறினர்; கயிறுகள் இறுக்கின; கழுத்தைச் சுருக்கின; இலக்குவன் திக்குமுக்கு ஆடினான்; திசை தெரியாமல் கைத்தான்; செயலற்றுத் தளர்ச்சி அடைந்தான்.

செய்தி கேட்ட இராமன், களம் நோக்கி விரைந்தான்; தம்பி நிலைகண்டு, உளம் தளர்ந்தான்; “களத்தில் தம்பியைப் பறிகொடுத்து விட்டோமே என்று ரிதவித்தான். வழி காட்டும் விழியற்றான்; இருளில் உழன்றான்; யுகமுடிவில் கடல் பிரளயம் மண்ணை மூடிக் காள்வதுபோல வேதனை அவனை வயப்படுத்திக் காண்டது. தேவர் செய்வது அறியாது திகைத்தனர்.