பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

311

யுத்த காண்டம்



பரதன், இராமன் வருகைக்காகக் காத்து இருந்தான்; உயிர்விடுதற்குக் காலம் தாழாமல் இருக்க, நெருப்பை மூட்டி வலம் வந்தான்; உயிர் காக்கும் உறுதுணைவனாய் அனுமன் செயல்பட்டான். குறித்த நேரத்தில் இராமனும் மற்றையோரும் அங்கு வந்து சேர்ந்தனர்; அனுமன் அவசரச் செய்தியாய் முன்வந்து பரதனைச் சந்தித்தான்.

எல்லாம் இனிமையாய் முடிந்தன; அவற்றைச் சொல்லச் சொற்கள் போதா, இதோ கம்பன் கவி!

அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த
பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற
விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்
மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி!

அரியணையை அனுமன் தாங்கினான்; அங்கதன் உடைவாள் ஏந்தினான்; பரதன் வெண்கொற்றக்குடை கவிழ்த்தான்; இலக்குவனும் சத்துருக்கன இளைஞனும் கவரி வீசினர்; திருவெண்ணெய் நல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளல் மரபில் வந்தவர் எடுத்துக் கொடுக்க, வாங்கி, வசிட்டரே இராமனுக்கு முடி சூட்டினார்.

“தீமைகள் தோன்றுதலைத் தவிர்க்க முடியாது; அவை படைப்பின் செயற்பாடு; என்றாலும் அவை என்றும் நிலைத்துநின்று வெற்றி பெறுதல் இல்லை” என்பது இக்காவியம் தரும் படிப்பினை; வாழ்க உலகெலாம்.