பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"snfl o --M 6]][TEF6]]T 159 கூறியுள்ள நீதி நெறிகளில் உறைக்கப்பட்டுள்ள அற நெறிகளையும் மறந்து விடலாகாது. புயத்துறை வலிய ரேனும் பொறையொடும் பெருந்தி வாழ்தல் தான் வெற்றிக்கு வழி வகுக்கும். அறமும் அது தான் என்று விளக்கம் கூறி இளையவனை சமாதானப்படுத்தினான். வாலிமைந்தன் அங்கதனைத் துது அனுப்பத் தீர்மானித்தனர். து துவன் கூற வேண்டியது என்ன என்பதை இராமன் அங்கதனிடம் சொல்லி அனுப்பினான். 'என் அவற்கு உரைப்பது? என்ன ஏந்திழையைக் கைவிட்டுத் தன்.உயிர் பெறுதல் நன்றோ? அன்றெனில் தலைகள் பத்தும் சின்னபின்னங்கள் செய்யச் செருக்களம் சேர்தல் நன்றோ? சொன்னவை இரண்டின் ஒன்றே துணி கெனச் சொல்லிடு” என்றான்” என்ற இரண்டில் ஒன்றைத் துணிக என்று சொல்லிடுவாய். அத்துடன் 'அறத்துறை அன்று; விரற்கு அழகும் அன்று; ஆண்மையன்று, மறத்துறை அன்று; சேமம் மறைந்து உறைந்து ஒதுங்கி வாழ்தல் நிறத்துறை வாளிகோத்து நேர் வந்து நிற்கும் ஆகின் புறத்துறை எதிரே வந்து போர்தரப் புகல்தி!' என்றான் என்று கூறி அனுப்பினான். அங்கதன் மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டான். தூது செல்வதில் மாருதிக்கு அடுத்தபடி நான் தான் என்னும் பெயர் பெற்றேன்’ என்று பெருமிதம் கொண்டு அம்பின் வேகத்தில் சென்றான். அங்கதன் இராவணன் செய்த கொடுமைகளைப் பற்றிக் குறிப்பாகச் சீதைக்கு இழைத்த துன்பங்களை நினைத்து அவ்வணங்கின் மீது அவ்வரக்கன் வைத்த ஆசைப் பிணியைப் பறித்து அவனை யார் முடிப்பர் என்ற சிந்தனையுடன் வேகமாகச் சென்று இராவணன் முன் நின்றான். 'அணி பறித்து அழகு செய்யும் அணங்கின் மேல் வைத்த ஆசைப் பிணி பறித்து, இவனை யாவர் முடிப்பவர் படிக்கண்? பேழ்வாய் பணி பறித்து எழுந்த மானக் கலுழனின், இவனைப் பற்றி மணிபறிந்து எழுந்த எந்தை யாரினும் வலியன்’ என்றான்'