பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 226 تدخلإصحاح காதலும் பெருங்காதலும் 'இருவர் மானிடர், தாபதர்; ஏந்திய வரிவில் வாட்கையர்; மன்மதன் மேனியர் தருமநீரர்; தயரதன் காதலர்; செருவில் நேரும் நிருதரைத் தேடுவார்” என்றெல்லாம் குறிப்பிடுகிறார். கரதுடனர்கள் போரில் மாண்ட பின்னர் சூர்ப்பனகை “ஆக்கினேன் மனத்து ஆசை, அவ்வாசை என் மூக்கினோடும் முடிய முடிந்திலேன்; வாக்கினால் உங்கள் வாழ்வையும், நாளையும் போக்கினேன்; கொடியேன்! என்று போயினாள்” என்று கூறி ஒல மிட்டுக் கொண்டு இராவணனிடம் ஒடுகிறாள். இராவணனிடம் இராம இலக்குவர்களைப் பற்றி 'கானிடை அடைந்து புவி காவல் புரிகின்றார்; மீனுடை நெடுங்கொடியினோன் அனையர்; மேல் கீழ் ஊன்உடை உடம்புடைமையோர், உவமை இல்லா மானிடர், தடித்தனர் கள்வாள் உருவி” என்றாள்” “மன்மதனை யொப்பர் மணிமேனி; வடமேருத் தன் எழிலை ஒப்பர்திரள் தோளின்வலி தன்னால் என்அதனை இப்பொழுது இசைப்பது? உலகேழின் நல்மதம் அழிப்பர்ஒர் இமைப்பின் நனிவில்லால் “வந்தனை முனித் தலைவர்பால் உடையர்; வானத்து இந்துவின் முகத்தர்; எறி நிரில் எழும் நாளக் கந்தமலரைப் பொருவு கண்ணர், கழல், கையர், அந்தமில் தவத் தொழிலர், ஆர் அவரை ஒப்பார்?” “வற்கலையார்; வாழ்கழலர்; மார்பின் அணி நூலர்; விற்கலையர்; வேதம் உறை நாவர், நனிமெய்யர்; உற்கு அலையர்; உன்னை ஒர்துகள் துணையும் உன்னார்; சொல்கலை எனத் தொலைவில் துணிகள் சுமந்தார்” “மாரர்உளரே இருவர் ஒர் உலகின் வாழ்வார்; வீரர்உளரே அவரின் வில்லதனின் வல்லார்;