பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பநாடன் காவியத்தில் 232 الحج إصلاح காதலும் பெருங்காதலும் பொழுது கடைசியில் இந்திரசித்தன் தனது நான்முகன் படையினால் அனுமனைக் கட்டினான். கட்டுண்ட அனுமனைக் கண்டவர்கள் மயில் இயல் சீதை தன் கற்பின் மாட்சியால் எயில் உடைத் திருநகர் சிதைப்ப எய்தினான்’ என்று பேசினர். இந்திரசித்தன் அனுமனை நான்முகன் படையால் கட்டி இழுத்துக் கொண்டு இராவணன் சபையில் கொண்டு போய் நிறுத்தினான். இராவணன் அரியாசனத்தில் கம்பீரமாக வீற்றிருந்ததை அனுமன் நேரில் கண்டான். அவனுடைய் பத்து முகங்களைப் பற்றியும் கம்பன் மிகச் சிறப்பாக விவரித்துக் கூறுகிறார். அவைகளில் “தேவரோடு இருந்து அரசியல் ஒருமுகம் செலுத்த மூவரோடு மாமந்திரம் ஒருமுகம் முயலப் பாவகாளிதன் பாவகம் ஒருமுகம் பயிலப் பூவை சானகி நினைப்பொடும் ஒரு முகம் பொருந்த” என்றும் காந்தள் மெல்விரல் சானகி தன் கற்பு எனும் கடலை நீந்தி ஏறுவது எங்கன் என்று ஒருமுகம் நினையச் சாந்து அளாவிய கோதை நன்மகளிர்தற் சூழ்ந்தார் ஏந்தும் ஆடியின் ஒரு முகம் இயல்புடன் இலங்க’ என்று கவிஞன் குறிப்பிடுகிறார். இராவணன் சபையில் இராமனுடைய துரதன் என்னும் முறையில் அரக்கனுக்கு நீதியை உணர்த்தும் நோக்கில் 'போய் இற்றீர்! நும் புலன் வென்று போற்றிய ஆலாயின் தீர்வு அரிது ஆகிய மாதவம், காயின் தீர்வு அரும் கேடு அரும் கற்பினாள் தீயின் துயவளைத் துயர் செய்ததால்’’ என்றும் "தீமை நன்மையைத் தீர்த்தல் ஒல்லாது எனும் வாய்மை நீக்கினை; மாதவத்தால் வந்த துய்மை, தூயவள் தன்வயின் தோன்றிய நோய்மையால் துடைக்கின்றனை நோக்கலாய்” என்றும், இன்னும்