பக்கம்:கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ཁ་ཟཟ── ༈ கம்பநாடன் காவியத்தில 28O - خلإصلاح காதலும் பெருங்காதவ “எத்தவம், எந்நலம், என்றன் கற்பு, நான் இத்தனை காலமும் உழந்த ஈதெலாம் பித்து எனலாய், அறம் பிழைத்ததால் அன்றே உத்தம நீ மனத்து உணர்ந்தி லாமையால்' என்றும் 'பங்கயத்து ஒருவனும், விடையின் பாகனும், சங்கு கை தாங்கிய தரும மூர்த்தியும் அங்கையின் நெல்லி போல் அனைத்தும் நோக்கிலும் மங்கையர் மன நிலை உணரவல்லரோ?" என்று கூறுவதைக் கம்பன் மிக மிக நுட்பமாகப் பெண்ணிை. பெருமையை சீதையின் மூலம் எடுத்துக் கூறுவதைக் காண்கிறோம் சீதை இவ்வாறு கூறிவிட்டு சாதலில் சிறந்தது ஒன்றுமில்லை என்று கூறி இளையவனை அழைத்து இடுதி தீ’’ எனக் க. ) தீப்புகுந்தாள். 'கனத்தினால் கடந்த பூண் முலைய கைவளை மனத்தினால் வாக்கினால் மறுவுற்றேன். எனில் சினத்தினால் சுடுதியால் தீச்செல்வா' என்றாள்; புனத்துழாய் கணவற்கும் வணக்கம் போக்கினாள்” ‘'நீந்தரும் புனலிடை நிவந்த தாமரை ஏய்ந்ததன் கோயிலே எய்துவாள் எனப் பாய்ந்தனள், பாய்தலும் பாலின் பஞ்செனத் தீய்ந்தது அவ்வெரி, அவள் கற்பின் தீயினால்’’ தீக்கடவுள் சீதையைக் கைகளில் ஏந்தி வந்தான். இராமன் அவனை யார் எனக் கேட்டான். 'அங்கியான், என்னை, இவ் அன்னை கற்பு எனும் பொங்குவெம் தீச்சுடப் பொறுக்கி லாமையால் இங்கு அணைந்தேன்; உறும் இயற்கை நோக்கியும் சங்கியா நிற்றியோ? எவர்க்கும் சான்றுளாய்” என்று கூற, 'அழிப்பில சான்று நீ உலகுக்கு; ஆதலால் இழிப்பில சொல்லி நீ, இவளை யாதும் ஒர்